Thursday, November 27, 2008

தன்னிலை மறக்கும்

தன்னிலை மறக்கும்

மலை மீதேறி மீதேறி
குறிஞ்சி பூக்கள்
உதயம்

பாலாற்றில் புது வெள்ளம்
வடிந்த மணலோடை
வழிப்பயணம்

பாலைவனத்தின் நடுவே]
நீர் வற்றிய வண்டியூர்
தெப்பகுளம்

தொடர்ந்தால்
தீபகற்ப ஊசிஇலை
அடர் காடு

நடுவே
ஓங்கிய சுவர்களுடைய
கோட்டை

கடவு திறந்தால்
பளபளக்கும்
உள் கோட்டை கதவுகளும்
தானே திறக்கும்

அதனுள்
கானல் நெருப்பு
எரிமலை நுழைவாயில்

பயந்து பயந்து
இறங்கி இறங்கி
ஏறினால்
வெந்நீர் ஊற்று
மேலேரும்

நீர் இட்டு அணைத்தால்
ஆவி
கூடுவிட்டு பறக்கும்
தன்னிலை மறக்கும்